தூக்குடா என் செல்லத்தை!!! அசால்ட்டாக முதலையை பிடித்து பைக்கில் கூட்டி சென்ற கிராம மக்கள்… வைரலாகும் வீடியோ..!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த அபூர்வமான சம்பவம் சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

வெள்ளநீரில் சிக்கிய ஒரு மாபெரும் முதலையை, வனத்துறை அதிகாரிகளுக்காக காத்திருக்காமல், தைரியமான கிராமவாசிகள் தாமே மீட்டு பாதுகாப்பாக ஆற்றில் விட்டனர்.

வெள்ளநீரால் அடித்துச் செல்லப்பட்ட முதலை ஒரு நிலப்பகுதியில் சிக்கியது. கிராமவாசிகள், உயிருக்கு ஆபத்தான இந்த வன உயிரினத்தை கயிறுகளால் கட்டி பாதுகாப்பாக பிடித்து, இருசக்கர வாகனத்தில் ஏற்றி எடுத்துச் சென்றனர். இது, முதல்முறையாக ஒரு முதலை பைக்கில் பயணம் செய்த சம்பவமாகவும் பதிவாகியுள்ளது.

இந்த மீட்பு காட்சிகள் ஆன்லைனில் பரவி, கிராமவாசிகளின் தைரியத்தையும் ஒருமைப்பாட்டையும் பாராட்டும் கருத்துகள் அதிகரித்து வருகின்றன. தகவலின்படி, முதலையை முதலில் ஒரு கிணற்றிலிருந்து மீட்டு, பின்னர் பிரதான சாலைக்கு கொண்டு வந்து, ஆற்றில் விடும் பணியை வெற்றிகரமாக முடித்துள்ளனர்.