ஈரான் மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல் ஈரானின் அணு ஆயுதத் திட்டங்கள் தங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று இஸ்ரேல் கருதியது.இதனால் ஈரான் மீது இஸ்ரேல் சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஏராளமான சேதம் ஏற்பட்டது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேலுக்குள் புகுந்து தக்க பதிலடி கொடுத்தது.இதனால் மத்திய கிழக்கில் பெரும் பதற்றம் ஏற்பட்டது. மேலும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் ஈரானில் புகுந்து வான் வழியாக தாக்குதல் நடத்தியது. இதனால் 3-ஆம் உலகப் போர் ஏற்பட கூடும் என பலரும் அச்சம் தெரிவித்தனர்.இந்தச் சூழலில்தான் அமெரிக்கா அதிபர் டிரம்ப்இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை நடத்தி போர் நிறுத்தத்துக்கு வழி வகுத்தார். இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. அந்த வகையில் 12 நாட்களாக நீடித்த இந்த போர் பதற்றம் நீங்கியது.இந்தச் சூழ்நிலையில் ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடுத்த வாரம் முக்கிய ஒப்பந்தம் கையொப்பமாக போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் நடைபெற்று வரும் நேட்டோ கூட்டமைப்பின் மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பங்கேற்று வருகிறார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், இந்த அறிவிப்பு வெளியிட்டார்.மேலும் இந்த ஒப்பந்தம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் டிரம்ப் தெரிவித்தார். அத்துடன் ஈரான் மீதான தாக்குதல் குறித்து விவரித்த டொனால்ட் டிரம்ப், ஈரானின் அணு ஆயுத தளவாடங்களை மட்டுமே குறிவைத்து தாக்கியதாகவும், வேறு எந்த பாதிப்பையும் அமெரிக்கா ஏற்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தார்.அதே சமயம் அமெரிக்க உடன் ஒப்பந்தம் கையொப்பமாவது குறித்து ஈரான் தரப்பில் எந்த ஒரு பதிலும் இதுவரை வெளியாகவில்லை.உலக நாடுகள் இடையே ஏற்படும் போர்களுக்கு அமெரிக்கா தான் முக்கிய காரணம் என பலரும் கருதுகின்றனர். இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் நடைபெற்ற போருக்கும் மூலக்காரணமே அமெரிக்கா தான் காரணம் என கூறப்படுகிறது. அதாவது இந்த போரினை அமெரிக்கா ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி இஸ்ரேலுக்கு ஏராளமான ஆயுதங்களை வியாபாரம் செய்தது. இதன் மூலம் அமெரிக்கா பெரும் லாபம் அடைந்தது.இதே போல உக்ரைன்- ரஷ்யா போரிலும் அமெரிக்கா உக்ரைனுக்கு ஏராளமான ஆயுதங்களை சப்ளை செய்ததுடன் அதற்கு பிரதிபலனாக உக்ரைனில் உள்ள கனிம வளங்களை குறிவைத்து ஒப்பந்தம் எடுத்துக் கொண்டது.இதனால் இஸ்ரேலில் உள்ள அரியவகை தாதுக்கள் அமெரிக்க வசம் சென்று விட்டன. வருங்காலத்தில் ஆப்கானிஸ்தானை போல உக்ரைனும் பாலைவனம் ஆகிவிடும் என அந்நாட்டை சேர்ந்த அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அமெரிக்கா எந்த ஒரு முடிவை எடுத்தாலும் அதன் பின்னால் வர்த்தக நோக்கம் இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். அதை மெய்ப்பிக்கும் வகையில், இஸ்ரேல் ஈரான் இடையே போர் நிறுத்தம் அமலுக்கு வந்த மறுவாரமே ஈரானுடன் அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா- ஈரான் இடையே அடுத்த வாரம் முக்கிய ஒப்பந்தம் கையொப்பம்; ட்ரம்ப் அறிவிப்பு
