தமிழகத்தில் கடலோர மாவட்ட்ங்களில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க 36 மணி நேர ‘சாகர் கவாச்’ பாதுகாப்பு ஒத்திகை

சென்னை:தீவிரவா​தி​களின் ஊடுரு​வலை முறியடிக்​கும் வகை​யில், தமிழக கடலோர மாவட்​டங்​களில் சாகர் கவாச் என்ற பெயரில் தொட்​கிய 36 மணி நேர பாது​காப்பு ஒத்​தி​கை, இன்று மாலை​யில் நிறைவடைகிறது.தமிழகத்​தில் உள்ள 14 கடலோர மாவட்​டங்​களில் காவல்​துறை​யின் சார்​பில் சாகர் கவாச் பாது​காப்பு ஒத்​திகை நேற்று காலை 6 மணிக்கு தொடங்​கியது. இதில், தமிழக கடலோர பாது​காப்பு குழு​மம், ஆயுதப்​படை, தமிழ்​நாடு சிறப்​புக் காவல் படை, கடலோர காவல் படை, குற்​றப் பிரிவு போலீ​சார் என அனைத்து பாது​காப்​புப் பிரி​வினரும் பங்​கேற்​றனர்.பாது​காப்பு ஒத்​தி​கை​யையொட்​டி, தமிழகத்​தில் உள்ள துறை​முகங்​கள், மீன் சந்​தைகள், கடலோரம் உள்ள கோயில்​கள், அரசு அலு​வலங்​கள், பொழுது​போக்கு மையங்​கள் ஆகிய​வற்​றின் பாது​காப்பு பல மடங்கு அதி​கரிக்​கப்​பட்​டது. மேலும், அரசு அலு​வல​கங்​களில் பொது​மக்​கள் சோதனைக்கு உட்​படுத்​தப்​பட்டே உள்ளே அனு​ம​திக்​கப்​பட்​டனர்.பாது​காப்பு ஒத்​தி​கை​யின் ஒரு பகு​தி​யாக தீவிர​வாதி போன்று மாறு​வேட​மிட்டு கடல் வழி​யாக ஊடுரு​விய காவலர்​களை, பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டிருக்​கும் போலீ​சார் அடை​யாளம் கண்டு கைது செய்​தனர். இந்த பாது​காப்பு ஒத்​தி​கை​யில் மொத்​தம் 8 ஆயிரம் போலீ​சார் ஈடு​படுத்​தப்​பட்​டுள்​ளனர்.இதையொட்டி, சென்​னை​யில் தலை​மைச் செயல​கம், துறை​முகம், காசிமேடு மீன்​பிடி துறை​முகம், டிஜிபி அலு​வல​கம், சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் உள்​ளிட்ட முக்​கிய​மான இடங்​களுக்கு பலத்த போலீஸ் பாது​காப்பு போடப்​பட்​டிருந்​தது.