குடிபோதையில் காருக்குள் தூங்கியவரின் தங்கச் செயின் – கைகடிகாரம் திருட்டு

கோவை ஜூன் 25 கோவை விளாங்குறிச்சி ரோடு ஸ்ரீ விக்னேஷ் நகரை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன். இவரது மகன் ஹரிஷ் ( வயது 33) இவர் நேற்று விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள 11 – 11 டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மது வாங்கி காருக்குள் வைத்து அருந்தினார். போதை தலைக்கு ஏறியதும் காருக்குள்ளே படுத்து தூங்கிவிட்டார். எழுந்து பார்த்தபோது அவரது கழுத்தில் அணிந்திருந்த 24 கிராம் தங்கச் செயின், கையில் கட்டி இருந்த ஒரு கைகடிகாரம் ஆகியவற்றை காணவில்லை. யாரோ திருடி சென்று விட்டனர். இது குறித்து ஹரீஷ் பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.