பெரும் போர் ஆரம்பம்.. கத்தாரை நோக்கி டேக் ஆப் ஆன அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஜெட்கள்.. டார்கெட் ஈரான்;

நியூயார்க்: கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களுக்குப் பிறகு, அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸின் போர் விமானங்கள் பாரசீக வளைகுடாவில் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளன.இவற்றில் சில கத்தார் நோக்கி விரைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் இந்த போர் பல தரப்பு மோதலாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.சற்று நேரத்திற்கு சவுதி அரேபியாவில் உள்ள இளவரசர் சுல்தான் விமான தளத்திலிருந்து அமெரிக்க போர் விமானங்கள் புறப்பட்டன. இது அமெரிக்க ராணுவத்தின் பதிலடி நடவடிக்கைக்கான தொடக்கத்தைக் குறிக்கிறது. வான்வெளியில் போர் விமானங்கள் செல்வதை நேரில் பார்த்தவர்கள், இது ஒரு பெரிய மோதலாக மாறக்கூடும் என்று கவலை தெரிவித்து உள்ளனர்.அமெரிக்காவின் பதில் நடவடிக்கை ஏற்கனவே உறுதியாகிவிட்டது. ஈரான், கத்தாரில் உள்ள அல் உடாய்ட் விமானத் தளம் மற்றும் ஈராக்கில் உள்ள அமெரிக்க தளத்தின் மீது ஏவுகணைகளை ஏவி உள்ளது.”பஷாரத் அல்-ஃபத்” என்ற பெயரில் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவி உள்ளது. பிராந்தியத்தில் உள்ள மிகப்பெரிய அமெரிக்க ராணுவ நிறுவங்களில் ஒன்றான கத்தாரில் உள்ள அல் உடேத் விமானத் தளம் உட்பட பல தளங்களை குறிவைத்து ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியுள்ளது.கத்தார் மீது 5 ஏவுகணைகளும், ஈராக் மீது ஒரு ஏவுகணையும் ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்கள் இரண்டுமே அந்த நாடுகளில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளை இலக்காகக் கொண்டவை என்று கூறப்படுகிறது. ஈரான் மொத்தம் ஆறு ஏவுகணைகளை கத்தார் மீதும், ஒரு ஏவுகணையை ஈராக் மீதும் அமெரிக்க இராணுவ உள்கட்டமைப்புகளை குறிவைத்து ஏவியது. இந்த ஏவுகணை தாக்குதல்களால் கத்தார் தனது வான்வெளியை மூடியது. மேலும் கத்தாரில் உள்ள அமெரிக்க குடிமக்கள் உடனடியாக தாழ்வான தங்குமிடத்திற்கு செல்லுமாறு அமெரிக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.