எந்த கூட்டணியில் விஜய் இணையவேண்டுமென தமிழருவி மணியன் ஐடியா!

ஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக சொன்ன போது அவருக்காக முன்னின்று பணி செய்தவர் தமிழருவி மணியன். ரஜினி அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொண்ட பின்னர் சைலண்ட் மோடுக்கு சென்ற தமிழருவி மணியன் தற்போது விஜய் அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில் தன்னை அழைத்தால் ஆலோசனை வழங்க தயார் என்று கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்க்கு உள்ள சாதகமான அம்சங்களையும் விகடனுக்கு அளித்த பேட்டியில் அவர் பகிர்ந்து கொண்டுள்ளார்.களத்துக்கு விஜய் வரவில்லை என்பதை பெரிய குற்றச்சாட்டாக சொல்ல முடியாது. திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து பெரிய வெற்றியை பெறக்கூடிய கதாநாயகர்களுக்கு இயல்பாகவே கிராமத்து கடைசி மனிதன் வரை சென்று சேருகிற ஆற்றல் உள்ளது. எனவே அவர் இப்பொழுதுதான் ஊர் ஊராக சென்று நேரடியாக மக்களை சந்தித்து தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.எவ்வளவு பெரிய தலைவராக இருந்தாலும் சரி நாட்டின் பிரதமராக இருந்தாலும் சரி அவர்களுக்கென்று ஒரு தனியாக சிந்தனையாளர்கள் குழு ஒன்று இருக்கும். எல்லாவற்றையும் ஒரு மனிதன் தானாகவே சிந்தித்து முடிவெடுக்க முடியாது. அந்த குழு வழிகாட்டுதலின் படி அவர் சுயமாக சிந்தித்து முடிவுகளை எடுப்பார். அதுபோன்று விஜய் அவர்களுக்கும் ஒரு நல்ல  குழு அமைய வேண்டும் வெறுமனே புஸ்ஸி ஆனந்தையும், ஆதவ அர்ஜுனாவையும் மட்டும் வைத்துக்கொண்டு அவர் எல்லாவற்றையுமே யோசித்து விட முடியாது.நானாகவே தேடிச் சென்று ஆலோசனைகளை வழங்கக்கூடிய நிலையில் என்னை தாழ்த்தி கொள்வது எப்பொழுதும் கிடையாது. ரஜினி கட்சி அரசியில் ஈடுபடப் போவதில்லை என அறிவித்த பிறகு கமலஹாசன் கூட அவருடைய மாநில செயலாளரை அனுப்பி வைத்தார். விஜய் அழைத்தால் பார்க்கலாம்.நான் 1967 தேர்தலில் இருந்து இன்றுவரை தொடர்ந்து அத்தனை தேர்தல் களங்களிலும் நான் பங்களிப்பை கொடுத்திருக்கிறேன் பணியாற்றி இருக்கிறேன். திமுகவை பொறுத்தவரை இதற்கு முன்பு ஐந்து முறை கலைஞருடைய தலைமையில் ஆட்சி இருந்திருக்கிறது. இப்படி ஒரு அவலம் செறிந்த ஊழல் நிறைந்த மக்கள் விரோத மலினமான ஒரு ஆட்சியை என் வாழ்நாளில் பார்க்கவே இல்லை. என்னுடைய ஒரே நோக்கம் இந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியை இந்த அதிகார பீடத்திலிருந்து அகற்ற வேண்டும். அதற்கு யார் தயாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக நான் குரல் கொடுப்பேன்.ஒவ்வொரு விஜய் ரசிகனின் வீட்டிலும் நான்கு வாக்குகள் நிச்சயமாக தவெகவுக்கு வரும். விஜய் ஒரு கிறிஸ்தவர். இன்றைக்கு சிறுவான்மை வாக்கு என்பது ஒட்டுமொத்தமாக திமுகவின் பக்கம் தான் அப்படியே போய் சேர்கிறது. ஒரு கிறிஸ்தவரே முதல்வராக வரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்றால் அந்த சமூகம் அவர் பின்னால் செல்வதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே கிடையாது. இஸ்லாமியர்கள் அளவுக்கு மக்கள் தொகையில் கிறித்தவர்கள் இல்லை. ஆனால் அந்த கிறித்தவருடைய வாக்கு வங்கி திமுகவுக்கு சேதாரமாகும்.ஒடுக்கப்பட்ட மக்கள் வந்து விஜய்யின் பக்கம் வந்து நிற்பதற்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இதெல்லாம் அவருக்கு இருக்கக்கூடிய கூடுதலான அம்சங்கள். இரண்டாவது முதன்முறையாக வருகிறார். முதன்முறையாக வாக்கு செலுத்த போகிற முதல் தலைமுறை வாக்காளர்களின் 80 விழுக்காடு வாக்கு விஜய்க்கு வரும்.” என்று அவர் கூறினார்.விஜய் திமுகவுக்கு எதிரான அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய வேண்டும். பாஜகவுடன் கொள்கை வேறுபாடு இருந்தாலும் தேர்தலுக்காக குறைந்த பட்ச செயல் திட்டத்தை வகுத்து இணையலாம். அப்போதுதான் ஆட்சியமைக்க முடியும். அவருக்கென்று 20 முதல் 25 சதவீத வாக்குகள் உள்ளன. அதை வைத்து ஆட்சியை பிடிக்க முடியாது. இந்த கூட்டணியில் இணைந்தால் ஆட்சியை பிடிக்கலாம். தனியாக நின்றால் தியாகி பட்டம் மட்டும் தான் கிடைக்கும். திமுக 1967இல் ஆட்சியை பிடிக்கும் போது அவர்கள் எதிர்த்த ராஜாஜியுடன் தான் கூட்டணி அமைத்தார். அதுதான் நாட்டிற்கே முன்னுதாரணம்.