கோவை ஜூன் 17 கோவை அருகே உள்ள கோவை புதூரில் அருள்மிகு பால விநாயகர் – முருகன்’ -ஐயப்பன் கோவில் உள்ளது.சம்பவத்தன்று கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து 850 ரூபாய் திருடப்பட்டு இருந்தது. இது குறித்து கோவில் நிர்வாக குழு துணை செயலாளர்வெங்கடேஷ் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் சந்திரன் வழக்கு பதிவு செய்து காரைக்கால் ,நெடுங்காடு பகுதியில் சேர்ந்த சின்னையன் ( வயது 42) என்பவரை கைது செய்தார். இவரிடமிருந்து பணம் மீட்க்கப்பட்டது.
கோவில் உண்டியல் உடைத்து பணம் திருடியவர் கைது.
