கோவை ஜூன் 16 கோவை மாவட்டம் ஆழியாறு பக்கம் உள்ள ஆத்துபுறா காலனியை சேர்ந்தவர் கருப்பையா.இவரது மகள் மகாலட்சுமி ( வயது18 )நேற்று முன்தினம் இரவில்இவர் வீட்டிற்குவெளியே உள்ள பாத்ரூம் செல்வதற்காக வந்தார். அப்போது ஒரு ஆசாமி அங்கு நின்று கொண்டிருப்பதை பார்த்து சத்தம்போட்டார். அதற்குள் இந்த ஆசாமி அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார் .வீட்டில் இருந்த 2 செல்போன் பணம் , ரூ.600 ஆகியவை காணாமல் போயிருந்தது. இது குறித்து மகாலட்சுமி ஆழியார் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ஆழியாறு ,ஆத்துபுரா காலனியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் பொன்னர் என்ற பொன்ராஜ் (வயது 30) என்பவரை நேற்று கைது செய்தனர். செல்போன், பணம் மீட்க்கப்பட்டது.
ஆள் இருக்கும் வீட்டில் புகுந்து திருடிய வாலிபர் கைது.
