குப்பை தொட்டியில் வீசப்பட்ட 4 நாய்க்குட்டிகள் மீட்பு.

கோவை ஜூன் 13 கோவை துடியலூர் பக்கமுள்ள கே. வடமதுரை, அண்ணா நகர், 6-வது வீதியில் உள்ள தண்ணீர் டேங்க் அருகே நேற்றுஒரு சாக்கு முட்டை கிடந்தது. அதில் 4நாய் குட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இது குறித்து மிருகவதைத் தடுப்பு பிரிவுஊழியர் சந்தியாதுடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் சென்று பார்த்தபோது அந்த சாக்கு முட்டையில்பிறந்து 2
நாட்களான4 நாய்குட்டிகள் இருந்ததுகண்டுபிடிக்கப்பட்டது. அதில் 3 குட்டிகள் இறந்த நிலையில் காணப்பட்டது. ஒரு நாய்க்குட்டி மட்டும் உயிரோடு இருந்தது அதை மீட்டு கால்நடை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர் இந்த நாய்க்குட்டிகளை குப்பை தொட்டியில் வீசியது யார்? என்பது குறித்து துடியலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். ,