உதகை மே 25
நீலகிரி மாவட்டம், குன்னூர் சிம் பூங்காவில் கோடை விழாவின் ஒரு பகுதியான
65வது பழக்காட்சியினை அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன் அவர்கள்,
மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு இ.ஆ.ப.,
முன்னிலையில் (23.05.2025) துவக்கி வைத்து, பார்வையிட்டார்,
இந்நிகழ்ச்சியில் அரசு தலைமைக் கொறடா தெரிவித்ததாவது
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, இந்தியாவின்
தலைசிறந்த சுற்றுலா தலமாக விளங்கும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகளை
கவரவும், அவர்களை உற்சாகப்படுத்தவும் வருடம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது,
தோட்டக்கலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் நடத்தப்படும் பல்வேறு
நிகழ்வுகளின் ஒரு பகுதியாக இவ்வாண்டிற்கான 65 வது பழக்காட்சி குன்னூரிலுள்ள
சிம் பூங்காவில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது,
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறையில் பெரும்பங்கு வகிக்கும் பழ
சாகுபடியின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக கடந்த 64 ஆண்டுகளாக
தோட்டக்கலைத்துறை சிறப்பாக நடத்தி வருகிறது. பழக்காட்சி நடத்தப்படும் சிம் பூங்காவில்
பல அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகள் காணப்படுகின்றன. காகித மரம்,பென்சில், யானைக்கால், டர்பன்டைன் என வெளிநாடுகளில் மட்டுமே காணப்படும்
1,100 அழகிய மரங்கள் காணப்படுகின்றன. இமயமலை, நேபாளம் போன்ற பகுதிகளில்
மட்டுமே காணப்படும் ருத்ராட்சம் மரம் இந்த பூங்காவில் பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இங்குள்ள ருத்ராட்ச மரம் சிம் பூங்காவின் முக்கிய அங்கமாக கருதப்படுகிறது. சுமார்
300 தாவரவியல் குடும்பங்களைச் சார்ந்த 1,200 சிற்றின தாவர வகைகள் உள்ள
சிம் பூங்காவில் ஆண்டுதோறும் பழக்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் பயிரிடப்படும். பழவகைகள் பிளம், பீச், பேரி, ஸ்ட்ராபெரி
சீத்தாப்பழம், சீமை, கொய்யா, பலா, வாழை பழவகைகள் விவசாயிகள் அவர்களின்
தோட்டங்களில் பயிரிட்டு வெளியூர்களுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர்,மேலும், மங்குஸ்தான், துரியன், விக்கிபழம், தவட்டை, நாவல்பழம், தாட்பூட்,
பெர்சிமன் மற்றும் அவகேடோ ஆகியவை இங்கு கிடைக்கிறது. குன்னூர் தோட்டக்கலை
துறையை சார்ந்த பழப் பண்ணைகளாகிய பழவியல் நிலையம், பர்லியார், கல்லார் ஆகிய
பண்ணைகளில் உயர்தர பழ நாற்றுக்கள் உற்பத்தி செய்யப்பட்டு, விவசாயிகளுக்கும்
பொதுமக்களுக்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், பழக்காட்சிக்கு பார்வையாளர்களை கவரும் விதமாக பழங்களை வைத்து
பல உருவ மாதிரிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் சிம் பூங்கா வாயிலில்
முற்றிலும் பழங்களைத் உருவாக்கப்பட்டுள்ள கொண்டு அலங்கார வளைவுகள் சுற்றுலா
பயணிகளை பெரிதும் சுவர்ந்துள்ளது. இவ்வாண்டு பழக்காட்சியின் சிறப்பம்சமாக
எலுமிச்சை பழங்களைக் கொண்டு பிரம்மாண்ட எலுமிச்சை வடிவடிமைப்புகள்,
பழரசக்கோப்பை, கடற்கரை குடை, கார், பழ கேக், பழ ஐஸ்கிரீம், தொப்பி, விசில்,
கண்ணாடி, நீர் சறுக்கு மட்டை, பழக் கூடைபந்து மற்றும் இளநீர் போன்ற வடிமைப்புகள்
3.8 டன் எடையுள்ள பல்வேறு பழங்களை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தின் மலைப்பிரதேச பழங்களின் அதிகரிக்கும் நோக்கில்
அனைவரும் பழ சாகுபடி பற்றிய விழிப்புணர்வை அடையும் விதமாக ஆண்டுதோறும்
பழந்தோட்டங்களுக்கான போட்டிகள் பழக்காட்சி அன்று நடைபெறும் போட்டிகள்
தோட்டக்கலைத்துறையினரால் வெகு சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இப்போட்டிகளில்
பங்கு கொண்ட விவசாய பெருமக்களுக்கும் மேலும் வெற்றி பெறவிருக்கும்
விவசாயிகளுக்கும் மனமார்ந்த வாழ்த்தினை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும்
பழக்காட்சியினை பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா
பயணிகளுக்கு எனது நல்வாழ்த்தினைத் கொள்கிறேன் என அரசு தலைமைக் கொறடா
அவர்கள் தெரிவித்ததார்.
இவ்விழாவில், குன்னூர் சார் ஆட்சியர் செல்வி சங்கீதா இ.ஆ.ப.,
தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் ஷிபிலா மேரி, துணை இயக்குநர்கள்
அப்ரோஸ் பேகம், நவநீதா, உதவி இயக்குநர் செல்வி விஜயலட்சுமி,
குன்னூர் நகராட்சி ஆணையாளர் இளம்பரிதி, நகர்மன்றத்தலைவர் சுசிலா,
திட்டக்குழு உறுப்பினர் ராமசாமி மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் உட்பட
முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்,