கோவை மே 14 கோவை ரயில் நிலையம் ரோட்டில் மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகம் உள்ளது.இதன் எதிர் புறம் உள்ள ரோட்டில் நேற்று ஒருவர் மயங்கி கிடந்தார்.உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். அவருக்கு 30 வயது இருக்கும்.அவர் யார்? என்று அடையாளம் தெரியவில்லை. இது குறித்து அரசு மருத்துவமனை இருப்பிட அதிகாரி சரவண பிரியா ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பிரபுதாஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
கலெக்டர் அலுவலகம் முன் உயிருக்கு போராடியவர் உயிரிழப்பு.
