கோவை மே8 கோவை அருகே உள்ள தடாகத்தை சேர்ந்தவர்இளங்கோவன் . இவரது மகன் பரத் குமார் ( வயது 19) இவர் நேற்று கோவை தடாகம் ரோடு – லாலி ரோடு சந்திப்பில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வேகமாக வந்த ஒரு ஜீப் இவரது பைக் மீது மோதியது.இதில் பரத்குமார் படுகாயம் அடைந்தார். அவரை சிகிச்சைக்காககோவை அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை அளித்தும் பலன் அளிக்காமல் இறந்தார். இது குறித்து போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார் ,இது தொடர்பாக ஜீப் ஒட்டி வந்த கவுண்டம்பாளையம் அம்புரோஸ் வீதியைச் சேர்ந்த சாம் கிறிஸ்து (வயது 26) என்பவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
பைக் மீது ஜீப் மோதி வாலிபர் உயிரிழப்பு.
