கோவை டாஸ்மாக் கடை அருகே போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது..!

கோவை போத்தனூர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் நேற்று மாலை அங்குள்ள கோணவாய்க்கால் பாளையம் டாஸ்மாக் கடை அருகே ரோந்து சுற்றி வந்தார் .அப்போது அங்கு சந்தேகபடும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 அட்டைகளில் 88 போதை மாத்திரைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது தொடர்பாக அந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.விசாரணையில் அவர் வெள்ளலூர் மகாலிங்கபுரம் ,ராமசாமி நகரை சேர்ந்த பூபாலன் மகன் சசிந்தரன் ( வயது 22) என்பது தெரியவந்தது. இவர் பிளம்பர் வேலை செய்து வந்தார். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.