கோவை மளிகை கடையில் 9 பவுன் செயின் திருட்டு.!!

கோவை டாடாபாத், 100 அடி ரோட்டை சேர்ந்தவர் ஜெய மகாராஜன் .இவரது மனைவி ராதாபாய் ( வயது 65) மளிகை கடை நடத்தி வருகிறார்கள். ராதாபாய் வழக்கமாக கடைக்குச் சென்றதும் தான் அணிந்திருக்கும் 9 பவுன் செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருப்பாராம்.. நேற்று இதே போல செயினை கழட்டி மேஜை டிராயரில் வைத்திருந்தார்,சிறிது நேரம் கழித்து பார்க்கும்போது அந்த செயினை காணவில்லை .யாரோ திருடி விட்டனர். அந்த நேரம் ஒரு ஆசாமி பால் பாக்கெட் வாங்க வந்தாராம் . அவர்தான் இந்த செயினை திருடி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து ராதாபாய் ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் செல்வகுமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..