குடோனில் பதுக்கி வைத்து விற்பனை செய்த ரூ.4 லட்சம் மதிப்புள்ள 76 கிலோ குட்கா பறிமுதல்- வாலிபர்கள் 2 பேர் கைது..!

கோவையில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனையை கண்காணித்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் சிங்காநல்லூர் போலீசாருக்கு நீலிகோணாம்பாளையத்தில் உள்ள ஒரு குடோனில் குட்காவை சிலர் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு விற்பனைக்காக 43 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4.5 லட்சம் மதிப்பிலான 76 கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர். அதனை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த கேரளா மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த அப்துல்ரகுமான் (வயது 42), திருப்பூர் பல்லடத்தை சேர்ந்த அர்ஜுனன் (39) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.