வாக்கிங் சென்ற பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு-2 மர்ம ஆசாமிகள் கைவரிசை..!

கோவை அருகே உள்ள கண்ணம்பாளையத்தைச் சேர்ந்தவர் வேலுமணி. இவரது மனைவி சுசித்ரா (வயது 49) இவர் நேற்று மாலை தனது வளர்ப்பு நாயுடன் கண்ணம்பாளையம் ரோட்டில் நடைபயிற்சி (வாக்கிங்) சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு ஆசாமி திடீரென்று சுசித்ராவின் கழுத்தில் கடந்த 7 பவுன் தங்க சங்கிலியை பறித்தார். இதில் சுசித்ரா நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து நகை பறித்த நபர் பின்னால் இருந்து வந்த ஒரு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்று விட்டார். இது குறித்து சூலூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு செய்து பைக்கில் தப்பிய 2 ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.