உணவில் மயக்க மருந்து கொடுத்து தாய் -மகளிடம் 7 பவுன் நகை கொள்ளை..

உணவில் மயக்க மருந்து கொடுத்து தாய் -மகளிடம் 7 பவுன் நகை கொள்ளை.. கோவை மாவட்டம் ஆனைமலையில் உள்ள தர்மராஜா காலனி சேர்ந்தவர் கமலம் (வயது 70) இவர்களது மகள் செல்வி (வயது 47 )இவர் மாசாணி அம்மன் கோவில் அருகே உள்ள கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் ராகுல் ( வயது 20 )இந்நிலையில் செல்வி கருத்து வேறுபாடு காரணமாக கணவரை விட்டு பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களது வீட்டில் கோவையை சேர்ந்த முத்தம்மாள்( வயது 50 )என்பவர் கடந்து சில நாட்களுக்கு முன்பு குடி வந்தார் .அவர் அங்குள்ளஓட்டலில் வேலை செய்து வந்தார். வீட்டுக்குள் புழுக்கம் அதிகமாக இருந்ததால் கமலம், செல்வி ஆகியோர் மொட்டை மாடியில் தூங்க சென்றனர். அப்போது முத்தம்மாள் வந்து நானும் உங்களுடன் தூங்குவதாக கூறியுள்ளார் .பின்னர் அவர் தான் கொண்டு வந்த சப்பாத்தி மற்றும் பாதம் பாலை அவர்கள் இருவருக்கும் கொடுத்துசாப்பிடுமாறு கூறியுள்ளார்..அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் கமலம், செல்வி ஆகியோர் மயக்கம் அடைந்தனர். அதை பயன்படுத்தி முத்தம்மாள் அவர்களின் கழுத்தில் கிடந்த 7 பவுன் தங்க செயினை திருடி விட்டு தப்பிச் சென்று விட்டார் .நேற்று காலையில் அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் வந்து பார்த்தபோது மொட்டை மாடியில் கமலம் ,செல்வி ஆகியோர் வாயில் நுரை தள்ளியவாறுயங்கி கிடந்தனர். அவர்கள் இருவரையும் மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் .இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து முத்தம்மாளை தேடி வருகிறார்கள். முத்தம்மாள் கொடுத்த பாதாம் பால் மற்றும் சப்பாத்தியை சாப்பிட்டதால் கமலம் செல்வி ஆகியோர் மயக்கம் அடைந்துள்ளனர். அதில் எந்த வகையான மயக்க மருந்து கலக்கப்பட்டுள்ளது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.உணவில் மயக்க மருந்து கொடுத்து நகை கொள்ளை அடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.