அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6.60 லட்சம் மோசடி – 2 ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு..!

கோவை புலியகுளம் அலமேலு மங்கம்மாள்லே அவுட் – டை சேர்ந்தவர் பூபதி ( வயது 36) இவரிடம் வடவள்ளி சுண்டபாளையம் சேர்ந்த அன்பு சிவா,பாக்கியலட்சுமி ஆகியோர் அறிமுகம் ஆனார்கள் .தங்களுக்கு அரசு உயர் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பழக்கம் உண்டு .அவர்கள் மூலம் உங்களுக்கு அரசு வேலை வாங்கித் தருகிறோம் என்று கூறினார்கள்.இதை நம்பிய பூபதி வங்கி கணக்கில் இருந்து ரூ. 6 லட்சத்து 60 ஆயிரத்தை எடுத்து கொடுத்தார் .வேலை வாங்கி கொடுக்கவில்லை.அந்த பணத்தையும் அவர்கள் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்து விட்டனர்.இது குறித்து பூபதி வடவள்ளி போலீசில் புகார் செய்தார். போலீசார் அன்பு சிவா, பாக்கியலட்சுமி ஆகியோர் மீது மோசடி, கொலை மிரட்டல் உட்பட 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.இவர்களில் அன்பு சிவா சென்னையில் தனியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், பாக்கியலட்சுமி மருதமலை அரசு மேல்நிலைப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாகவும் வேலை பார்த்து வருகிறார்கள்.