கோவை பேருந்தில் பெண்ணிடம் 5 பவுன் தாலி செயின் திருட்டு..!

கோவை கவுண்டம்பாளையம் ஜி.என். மில்,பகுதியில் உள்ள என்.பி.சி. நகரை சேர்ந்தவர் விஜயராஜ் இவரது மனைவி விஸ்வ பிரியா (வயது 27) துடியலூர் பகுதியில் உள்ள கார் சர்வீஸ் மையத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று துடியலூரில் இருந்து அரசு டவுன் பஸ்சில் வந்து கொண்டிருந்தார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள புது பஸ் நிலையத்தில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 5 பவுன் தாலி செயினை காணவில்லை .யாரோ திருடி சென்று விட்டனர். இதுகுறித்து சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்: