ஓடும் பேருந்தில் பெண்ணிடம் 4 பவுன் செயின் திருட்டு..!

கோவை சாய்பாபா காலனி, பிரபு நகரை சேர்ந்தவர் அய்யப்பன். இவரது மனைவி கஸ்தூரி ( வயது 47) வீட்டு வேலை செய்து வருகிறார் :இவர் நேற்று எருக்கம் பெனியில் இருந்து 100 அடி ரோட்டுக்கு அரசு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார். காந்திபுரம் 10 -வது வீதி பஸ் ஸ்டாப்பில் இறங்கும் போது அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் செயினை காணவில்லை. யாரோ ஓடும் பஸ்சில் திருடி விட்டனர். இது குறித்து கஸ்தூரி ரத்தினபுரி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..