கோவையில் காருடன் 28 கிலோ குட்கா பறிமுதல் – டிரைவர் கைது..!

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படையினர் பல இடங்களில் அதிரடி வாகன சோதனை நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் ஆணை கட்டி தண்ணீர் பந்தல் பஸ் ஸ்டாப் அருகே பறக்கும் படையை சேர்ந்த ரவீந்திரன் தலைமையில் குழுவினர் தீவிரவாத சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சாக்கு மூட்டையில் 28 கிலோ குட்கா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. .இது தொடர்பாக கார் டிரைவரிடம் நடத்திய விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடியை சேர்ந்த கிருஷ்ணகுமார் ( வயது 40 )என்பதும் ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு புகையிலைப் பொருட்களை கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கிருஷ்ணகுமாரை கைது செய்தனர்.