மாநிலம் முழுவதும் 268 மையங்கள்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் மற்றும் கடம்பூர் பேரூராட்சி தவிர அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது.

அதனை தொடர்ந்து பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று இந்த தேர்தலுக்கான முடிவுகள் அறிவிக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மாநிலம் முழுவதும் 268 மையங்களில் எண்ணப்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்கு எண்ணும் மையங்களின் விவரங்களை தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டுள்ளது.