சிறுமியை பாலியல் பலாத்கார செய்த வழக்கில் கைதானவருக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை.!!

கோவை மாவட்டம், ஆனைமலை செம்மேடு பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை கடந்த 24- 11 – 20 20 அன்று இவரது உறவினரான செம்மேடு கருப்பசாமி (வயது 43) திருமண ஆசைகாட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக ஆனைமலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்புசாமி ( வயது 43) என்பவரை கைது செய்தனர். . இவர் மீது கோவை போக்சோ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி குலசேகரன் வழக்கை விசாரித்து குற்றம் சாட்டப்பட்ட கருப்புசாமிக்கு 25 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரு 15 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் ரசிதா ஆஜராகி வாதாடினார்.