ஸ்கார்பியோ காரில் கடத்தி வரப்பட்ட 243 கர்நாடக மது பாட்டில்கள் பறிமுதல்- 5 பேர் கைது..!

கோவை மாவட்டம் நெகமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணபெருமாள் ,சப் இன்ஸ்பெக்டர் முகம்மது ஆகியோர் நேற்று பல்லடம்- பொள்ளாச்சி ரோட்டில் உள்ள நெகமம் நால் ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள்.அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ” ஸ்கார்பியோ” காரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அதில் கர்நாடக மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 243 மதுபாட்டில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதை கடத்தி வந்த பாலக்காடு மீனாட்சிபுரம் உதயகுமார் ( வயது 41 )பொள்ளாச்சி, ஏ. சிங்காநல்லூர், சபரி கிரிவாசன் (வயது 39) ஆத்து பொள்ளாச்சி,காளியப்ப கவுண்டன் புதூர் செந்தில்வேல் ( வயது 53) திருப்பூர் சமத்துவபுரம் முகமத் பஷீர் (வயது 25) ஆனைமலை உடைய குளம் சபரிநாதன் (வயது 32) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காரும், 45 லிட்டர் கொள்ளவு கொண்ட 243 கர்நாடக மாநில மதுபாட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது.இவர்கள் 5பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.