12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை – தொழிலாளிக்கு 5 ஆண்டு சிறை.!!

கோவை மாவட்டத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 வயது சிறுமிக்கு பாலில் தொல்லை கொடுத்ததாக சூலூர் பக்கம் உள்ள சின்ன வதம்பச்சேரியைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா (வயது 35) என்பவர் மீது பொள்ளாச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது .இந்த வழக்கை விசாரித்த நீதிபதி குலசேகரன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ராஜாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ 5, ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.. இந்த வழக்கை சிறந்த முறையில் புலன் விசாரணை மேற்கொண்ட போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் பாராட்டினார்..