புஞ்சை புளியம்பட்டியில் விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது – 1200 கிராம் கஞ்சா பறிமுதல்..!

சத்தியமங்கலம் : புஞ்சை புளியம்பட்டி பஸ் ஸ்டாண்ட் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பஸ் நிலையத்தில் பயணிகள் நிற்கும் பகுதியில் இரண்டு வாலிபர்கள் சந்தேகப்படும்படி நின்றிருந்ததை போலீசார் கண்டனர். இருவரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டதில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் அசோக் நகரைச் சேர்ந்த சதீஷ்குமார்(31) மற்றும் வையம்பாளையத்தைச் சேர்ந்த பிரவீன் (26) என்பதும், கஞ்சா வாங்கி வந்து இங்கு விற்பனை செய்து வந்ததும் தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், விற்பனைக்காக வைத்திருந்த 1200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சத்தியமங்கலம் கிளை சிறையில் அடைத்தனர்..