சூலூரில் 15 வயது சிறுமிக்கு திருமணம்- தொழிலாளி மீது புகார்.!!

கோவை சூலூர் பக்கம் உள்ள மாதப்பூர் பகுதியை சேர்ந்தவர் 15 வயது சிறுமி. இவரை ராசிபாளையத்தைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி பாலசுப்பிரமணியன் ( வயது 24) என்பவர் கடந்த 5 நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இந்த சம்பவம் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதையடுத்து பாலசுப்பிரமணியன் மீது சமூக நலத்துறை அதிகாரி சூலூர் போலீசில் புகார் செய்தார் .அவர்கள் குழந்தை திருமணம் செய்து கொண்ட புகாரை பேரூர் அனைத்து மகளிர் போலீசுக்கு அனுப்பி வைத்தனர்.இது தொடர்பாக பேரூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்..