வீட்டின் மாடியில் பணம் வைத்து சீட்டாடிய 10 பேர் கைது..!

கோவை போத்தனூர், கணேசபுரம், விட்டல் நகரில் வசிப்பவர் விஜயகுமார். இவரது வீட்டில் மாடியில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போத்தனூர் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது. போலீசார் அங்கு திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியது தெரியவந்தது. இது தொடர்பாக சுந்தராபுரம் ராமகிருஷ்ணன் ( 42 ) கோட்டூர் சண்முகசுந்தரம் ( 44)சுக்கிரவார்பேட்டை ரவிக்குமார் (54) பெரியநாயக்கன்பாளையம் மணி ( 60 )உடுமலை கார்த்திக் (21)கணேசபுரம் விஜயகுமார் (51) வெள்ளக்கிணறு வெங்கடேசன் (49) கரடிமடை சிவக்குமார் ( 49)கோவைப்புதூர் முனியப்பன் (46) ஜல்லிப்பட்டி பழனிச்சாமி ( 37)ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட பணம் ரூ 32 ஆயிரத்து 700 பறிமுதல் செய்யப்பட்டது.