மொபட் மீது லாரி மோதி முதியவர் சாவு …       

மொபட் மீது லாரி மோதி முதியவர் சாவு …

கோவை கணபதி கணேஷ் லேஅவுட்டை சேர்ந்தவர் இளங்கோ( 64 ) இவர் நேற்று மொட்டில் சரவணம்பட்டி -விசுவாசபுரம் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு லாரி இவரது மொபட் மீது மோதியது. இதில் இளங்கோ படுகாயம் அடைந்து அதே இடத்தில் பலியானார் .இது குறித்து அவரது மகன் தமிழரசன் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வேல்முருகன் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக லாரி டிரைவர் முத்தையா வயது 46 என்பது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது மேலும் விசாரணை நடந்து வருகிறது..