ஆட்டோவில் கடத்திய 899 கிலோ குட்கா பறிமுதல் – வியாபாரி உட்பட 3 பேர் கைது..!

கோவை உக்கடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுஜாதா, சப் இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி ஆகியோர் நேற்று மாலை கோவை ரயில் நிலையம் பின்புறம் உள்ள குட்ஷெட்ரோட்டில் வாகன சோதனை நடத்தினார்கள். அப்போது ஒரு ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர் .அதில் 899 கிலோ எடை கொண்ட குட்காவும், ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் பணமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவைகளின் மொத்த மதிப்பு ரூ.8 லட்சத்து 23 ஆயிரம் இருக்கும். இவைகள் பறிமுதல் செய்யப்பட்டனர் .இதை கடத்தி வந்த உக்கடம் கோட்டை புதூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் அபுதாகிர் ( வயது 45) கணுவாய் காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த கடை ஊழியர் ராம் பிரபு (வயது 40) களப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்த மளிகை வியாபாரி ஐசக் ( வயது 35) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது .மேலும் விசாரணை நடந்து வருகிறது.