குடிப்பழக்கத்தால் 2 பேர் தூக்கு போட்டு தற்கொலை…

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள டி.கோட்டம் பட்டி,. அண்ணா நகரை சேர்ந்தவர் முத்துசாமி இவரது மகன் தமிழரசன் ( வயது 21) பெயிண்டி ங் வேலை செய்து வந்தார் .குடிப்பழக்கம் உடையவர்’.மது பழக்கத்தை மறப்பதற்கு முயற்சி செய்து பார்த்தார். அவரால் முடியவில்லை. இதனால் வாழ்க்கையில்வருபடைந்துஅவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது தாயார் லட்சுமி ராமாத்தாள் மகாலிங்கபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதே போல தொண்டாமுத்தூர் பக்கம் உள்ளபுல்லா கவுண்டன் புதூர் ஏ.டி. காலனியை சேர்ந்தவர் சந்தோஷ் ( வயது 35) எலக்ட்ரீசியன், இவருக்கு திருமணம் ஆகி 13 ஆண்டுகள் ஆகிறது. ஒரு மகனும் ஒரு மகளும், உள்ளனர் சந்தோஷ் குடிப்பழக்கம் உடையவர். இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்வார் .இந்த நிலையில் அவரது மனைவி பவித்ரா கோபித்துக் கொண்டு 3 நாட்களுக்கு முன்பு அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார் .இந்த நிலையில் வாழ்க்கையில் வெறுப்படைந்தசந்தோஷ் நேற்று அவரது வீட்டில் வேட்டியை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி பவித்ரா தொண்டாமுத்தூர் போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.