கோவை ஆலந்துறை கிராமம் முகாசிமங்கலத்தில் குக்கரில் காட்டுப் பன்றி கறியை சமைத்த நபர் அவுட்காயுடன் கைது…

கோவை ஆலந்துறை கிராமம் முகாசிமங்கலத்தைச் சேர்ந்த கொலந்தான். என்பவர் வீட்டில் காட்டுப் பன்றி இறைச்சி உள்ளதாக மதுக்கரை வனத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் கொலந்தான் என்பவர் வீட்டில் சோதனை நடத்தினர். அப்பொழுது அவரது வீட்டில் குக்கரில் காட்டு பன்றி கறியை சமைத்துக் கொண்டு இருப்பது தெரிய வந்தது. இது குறித்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டதால் வன உயிரின வழக்கு பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது வீட்டில் ஏதேனும் வன உயிரின பொருட்கள் உள்ளதா என்று சோதனை செய்தனர். அந்த சோதனையில் மூன்று சிறிய நாட்டு வெடிகுண்டு (அவுட்டுகாய்) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது குறித்து ஆலந்துறை காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். புகாரின் பேரில் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் மூன்று அவுட்டுகாய்களை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.