கோவை அருகே பெண் “பிசியோதெரபிஸ்ட்” கொடூர கொலையில் பெண் உட்பட 2 பேர் கைது…

கோவை போத்தனூர் செட்டிபாளையம் ரோட்டில் உள்ள அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் பாலா இசக்கிமுத்து. இவர் கோவை மாநகராட்சியில் ஒப்பந்த தூய்மை பணியாளராகவேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி தனலட்சுமி ( வயது 32) பிசியோதெரபிஸ்ட். கடந்த 30 ஆம் தேதி கணவர் பாலா இசக்கி முத்து வேலைக்கு சென்று விட்டார். தனலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். இரவு 7 மணிக்கு கணவர் பாலா இசக்கிமுத்துவீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் தனலட்சுமி வாயில் ரத்தம் வழிந்தவாறு மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அவர் கதறி அழுதார்.அத்துடன் அவர் கழுத்தில் அணிந்திருந்த செயினும் மற்றும் அவர் பயன்படுத்திய செல்போனும்மாயமாகி இருந்தது. இதுகுறித்துசெட்டிபாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அவரது உடலை மீட்டுபிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவர் முகத்தில் தலையணையால் அமுக்கி மூச்சு திணறடித்து கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.கொலையாளிகள் அவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் செயின் மற்றும் செல்போனையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.கொலையாளிகளை பிடிக்க கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் 5 தனிப்படையில் அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்ததில் ஒரு ஆணும், பர்த் அணிந்த ஒரு பெண்ணும் வந்து செல்லும் காட்சி பதிவாகி இருந்தது .அதை வைத்து கொலை அணிகளை போலீசார் தேடி வந்தனர் இந்த நடையில் இந்த கொலையில் தொடர்புடைய வால்பாறை, சோலையார் நகரை சேர்ந்த தங்கராஜ் மனைவி சந்திர ஜோதி ( வயது 41)பெரம்பலூர் மாவட்டம்,குன்னம் பக்கம் உள்ள ஆயக்குடியைச் சேர்ந்த சுரேஷ் (வயது 39) ஆகியோரை கைது நேற்று இரவு கைது செய்தனர். இவர்கள்இருவரும் தற்போது ஆனைமலை கோட்டூர், வீரபோபன் வீதியில் வசித்து வருகிறார்கள்