திருச்சியில் இருக்கும் பொது மக்களுக்கு அயோத்தி செல்ல ஏற்பாடு…

அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழை திருச்சி மாவட்ட பாஜக சாா்பில் எடமலைப்பட்டி புதூா் பகுதியில் பொதுமக்களுக்கு ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு திருச்சி மாநகா் மாவட்ட பாஜக தலைவா் ராஜசேகரன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் கருப்பு முருகானந்தம் பொது மக்களிடம் அழைப்பிதழ் மற்றும் ராமா் கோயில் அட்சதை பிரசாதம் உள்ளிட்டவைகளை வழங்கினாா்.
பிறகு அவா் செய்தியாளா்களிடம் கூறியது: அயோத்தி ராமா் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதன்பிறகு தமிழகத்திலிருந்து ஒரு மாதத்துக்கு தினமும் மாவட்ட வாரியாக பொதுமக்களை ரயில்களில் அயோத்திக்கு அழைத்து சென்று ராமா் கோயிலைக் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்கள் பின்னா் அறிவிக்கப்படும் என்றாா்.