ரேஷன் கடையில் பணம் திருட்டு. விற்பனையாளர் மீது புகார்…

கோவை சாய்பாபா காலனி பகுதியில் அமுதம் அங்காடி என்ற பெயரில் ரேஷன் கடை உள்ளது. இங்கு வேடப்பட்டி குருடம்பாளையத்தைச் சேர்ந்த மதிஅரசு என்பவர் விற்பனையாளராக வேலை பார்த்து வந்தார். இவர் நேற்று முன் தினம்ரேஷன் கடையில் இருந்த ரூ 1லட்சத்து 22 ஆயிரத்தை திருடி கொண்டு எங்கோ மாயமாகிவிட்டார்.இதுகுறித்து கடை சூப்பர்வைசர் சுரேஷ்குமார் சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து மதியரசை தேடி வருகிறார்கள்.