இது என்ன காதல் கடிதமா..? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு?- புகழேந்தி பேட்டி..!

பெரியகுளம்: எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ்சிடம் கொடுத்து விட்டு, அவரின் தலைமையை ஏற்கட்டும் என புகழேந்தி தெரிவித்துள்ளார்.

தேனி மாவட்டம், பெரியகுளம் தென்கரையில் உள்ள வீட்டில் ஓபிஎஸ்சை நேற்று சந்தித்த பின், அவரது ஆதரவு கொள்கை பரப்பு செயலாளர் புகழேந்தி அளித்த பேட்டி: ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என தலைமை தேர்தல் ஆணையர் சார்பில் அனுப்பப்பட்ட கடிதத்தை எடப்பாடி தரப்பினர் ஏற்க மறுத்துள்ளனர்.

இது என்ன காதல் கடிதமா? வாங்க மாட்டேன் என திருப்பி அனுப்புவதற்கு? தேர்தல் ஆணையத்தின் தரவுகள் அடிப்படையில் தான் மாநில தேர்தல் ஆணையர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்று கடிதம் அனுப்பி உள்ளனர். சசிகலா காலில் விழுந்ததால் தான் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக முடிந்தது. அவரைப் பற்றி பேசுவதற்கு எடப்பாடி தரப்பினருக்கு தகுதி கிடையாது. அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பதே ஓபிஎஸ் விருப்பம். எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கடிதம் எழுதி ஓபிஎஸ்சிடம் கொடுத்து விட்டு அவரது தலைமையை ஏற்கட்டும் என்றார்.