என்ன கொடுமை டா இது… உடும்பை பாலியல் வன்கொடுமை செய்த காம கொடூரர்கள்.!!

பெரிய பல்லி வகையான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதேன் கிராமம் அருகாமையில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் என்பது தெரியவந்துள்ளது.

தொடர்ந்து வனத்துறையினர் சந்தேகத்தில், அவர்களுடைய செல்போன்களை சோதித்த நிலையில், அதில் சில வாரங்களுக்கு முன் அப்பகுதிக்கு வந்த இவர்கள் பெரிய வகை பல்லியான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது. செல்போனில் அதனை வீடியோவாக எடுத்து வைத்திருந்த அவர்கள் மூவரையும் வனத்துறையினர் கைது செய்தனர்.

மேலும், இந்த விஷயம் தொடர்பாக வனத்துறை உயர்அதிகாரி கூறுகையில், “விலங்குகளை பாலியல் வன்கொடுமை செய்தால், எவ்வகையான தண்டனை சட்டத்தின் கீழ் வழக்கு பதிய சட்டத்தில் இடம் உள்ளது என்றும் இது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றும் கூறியுள்ளார். மேலும், உடும்பு வகை பாதுகாக்கப்பட வேண்டிய உயிரினங்கள் பட்டியலில் இருப்பதால், இவர்களின் குற்றமானது நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரையிலான கடுங்காவல் தண்டனை நிச்சயமாக கிடைக்கும்.” என்று கூறியுள்ளார்.