காங்கிரஸிலிருந்து விலகினார் ஜே&கே மகாராஜா ஹரி சிங்கின் பேரன் விக்ரமாதித்யா சிங்..!

ஜே & கே இன் மகாராஜா ஹரி சிங்கின் பேரனும், காங்கிரஸ் மூத்த தலைவர் கரண் சிங்கின் மகனுமான முன்னாள் ஜே & கே எம்எல்சி விக்ரமாதித்ய சிங் செவ்வாய்க்கிழமை காங்கிரஸில் இருந்து ராஜினாமா செய்தார்.

கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்திக்கு அவர் எழுதிய ராஜினாமா கடிதத்தில், ‘ஜம்மு-காஷ்மீர் மக்களின் உணர்வுகள் மற்றும் அபிலாஷைகளை காங்கிரஸால் உணர்ந்து பிரதிபலிக்க முடியவில்லை என்பது எனது நம்பிக்கை’ என்று எழுதினார்.