முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று துணைவேந்தர்கள் மாநாடு தொடக்கம்..!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில், பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது.

உயா்கல்வியின் வளா்ச்சி தொடா்பாக பல்கலைக்கழக துணைவேந்தா்கள் பங்கேற்கும் மாநாடு சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தொடங்கியது. இந்த மாநாட்டுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 17ஆம் தேதி இந்த மாநாடு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், முதல்வா் மு.க.ஸ்டாலினின் தில்லி பயணத்தையொட்டி இந்தக் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டு, இன்று தொடங்கியிருக்கிறது.

மாநில கல்விக்கொள்கையை உருவாக்குவது, உயர்கல்வியில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிப்பது, கல்வியின் தரத்தை மேம்படுத்துவது உள்ளிட்டவை குறித்து இந்த மாநாட்டில் ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

இது மட்டுமல்லாமல், இந்த பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் பல்வேறு அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்படயிருப்பதாகவும் கூறப்படுகிறது.