வால்பாறை சாலையில் தாய் யானையுடன் தும்பிக்கை இல்லாத குட்டி யானை உலா… சமூக வலைதளங்களில் வைரல்..!!

கோவை மாவட்டம் வால்பாறையிலிருந்து கேரள மாநிலமான சாலக்குடிக்கு செல்லும் பிரசித்தி பெற்ற அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அருகே உள்ள சாலையில் தாயுடன் தும்பிக்கை இல்லாத அதன் குட்டி யானை உலா வந்த காட்சியை அப்பகுதியிலிருந்த பொதுமக்கள் தங்களின் செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இக்காட்சி காண்போரை கண்கலங்க வைத்துள்ள நிலையில் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..