இன்று தொடங்கியது திரிபுரா சட்டசபை தேர்தல்..!

கர்தாலா: திரிபுரா சட்டசபைக்கு இன்று தேர்தல் நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களான நாகாலாந்து ,மேகாலயா திரிபுரா ஆகிய 3 மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் குறித்த அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ராஜிவ் குமார் கடந்த ஜனவரி 18-ல் வெளியிட்டார்.இதையடுத்து திரிபுரா மாநிலத்திற்கு இன்று (16 ம் தேதி) தேர்தல் நடக்கிறது. இம்மாநிலத்தில் மொத்தமுள்ள 60 இடங்களுக்கு கடந்த ஜன.21-ல் வேட்புமனு துவங்கி, வேட்பு மனு தாககல் ஜன.31-ல் முடிந்தது. இதையடுத்து இன்று (16 ம் தேதி) ஓட்டுப்பதிவு நடக்கிறது. 28 லட்சத்திற்கு மேற்பட்ட வாக்காளர்கள் ஓட்டளிக்கின்றனர். இதற்கான விரிவான ஏற்பாடுகளை தேர்தல் ஆணையர் செய்துள்ளார்.இம்முறையும் ஆட்சியை தக்க வைக்க பா.ஜ. முயற்சித்து வருகிறது. எதிர் கட்சிகளும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி இருந்தன.