திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கு: கோவையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை

திருச்சியை சேர்ந்தவர் ராமஜெயம். தொழிலதிபர். இவர் திருச்சி – கல்லணை சாலையில் திருவளர்ச்சோலை பகுதியில் கடந்த 29.3 2012ம் ஆண்டு  கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர். பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்டது. இந்த நிலையில், இந்த வழக்கு சம்பந்தமாக தற்போது சிபிசிஐடி போலீசாருக்கு முக்கிய தடயமாக மாருதி சுசூகி வெர்ஷா வாகனம் கொலை சம்பவம் நடைபெற்ற பகுதியில் சென்றது தெரியவந்துள்ளது  அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சியில் இந்த மாருதி சுசுகி வர்ஷா வாகனம் பதிவாகியுள்ளது இந்த நிலையில் சிபிசிஐடி சிறப்பு விசாரணை குழு மூன்று டிஎஸ்பி தலைமையில் அமைக்கப்பட்டது  தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாருதி சுசுகி வர்ஷா வாகனத்தின் உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் குறிப்பாக கோவையில் 250க்கும் மேற்பட்ட மாருதி சுசுகி வர்ஷா உரிமையாளரிடம் விசாரணை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது