இன்ஸ்டாகிராம் மூலம் பழகி சென்னைக்கு கடத்தல்: 10-ம் வகுப்பு மாணவி பாலியல் பலாத்காரம்- சிறுவன், சிறுமியின் அண்ணன் போக்ஸோவில் கைது..!

கோவை பெரியநாயக்கன் பாளையத்தை அடுத்த சாமநாயக்கன் பாளையம் பகுதியை
சேர்ந்தவர் 15 வயது சிறுமி. அவர் அங்குள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு
படித்து வருகிறார்.

சம்பவத்தன்று இவர் வீட்டில் இருந்து திடீரென மாயமானர். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து சிறுமியின் தாயார் பெரியநாயக்கன் பாளையம் போலீசில் புகார்  தெரிவித்தார். புகாரின் பேரில் போலீசார் மாயம் வழக்குப்பதிவு செய்து
சிறுமியை தேடி வந்தனர். அப்போது சிறுமி சென்னையில் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் சென்னை விரைந்து சென்று சிறுமியை மீட்டனர். பின்னர்
சிறுமியை கோவை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில்
சிறுமிக்கும் சென்னையை சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இன்ஸ்டாகிராம்
மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
சிறுவன்-அண்ணன்
இது நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் ஒருவரை ஒருவர் காதலித்து
வந்துள்ளனர். அப்போது சிறுவன், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சென்னைக்கு
கடத்தி சென்றுள்ளார். அங்கு சிறுவன், மாணவியை பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது. மேலும் விசாரணையில் சிறுமியை அவரது தாயாரின் தங்கை மகன் அரவிந்த் (25) என்பவரும்
சிறுமியை 2 வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து பெரியநாயக்கன் பாளையம் போலீசார் மாயம் வழக்கை போக்சோ வழக்காக
மாற்றி சிறுமியை கடத்தி சென்ற 17 வயது சிறுவன் மற்றும் சிறுமியின்
அண்ணன் அரவிந்த் ஆகியோரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில்
அடைத்தனர்.