பயணிகளின் கவனத்திற்கு.. கோவைக்கு வரும் 3 ரயில்கள் நாளை போத்தனூா் வரை மட்டுமே இயக்கம்..!!

கோவை: மதுரை, கண்ணூா், ஷொரனூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரெயில்கள் நாளை ( 20-ந் தேதி) போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும் என ரெயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சேலம் கோட்ட ரெயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- கோவை ரெயில் நிலையத்தில் பொறியியல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் மதுரை, கண்ணூா், சொரனூரில் இருந்து நாளை கோவைக்கு இயக்கப்படும் ரெயில்கள், போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதன்படி, மதுரையில் இருந்து நாளை காலை 7.30 மணிக்குப் புறப்படும் மதுரை – கோவை ரெயில் (எண்: 16722), கண்ணூரில் இருந்து நாளை காலை 6.20 மணிக்குப் புறப்படும் கண்ணூா் – கோவை ரெயில் (எண்: 16607), சொரனூரில் இருந்து நாளை காலை 8.20 மணிக்குப் புறப்படும் சொரனூா் – கோவை ரெயில் (எண்: 06458) ஆகிய 3 ரெயில்கள் போத்தனூா் வரை மட்டுமே இயக்கப்படும். நாளை இந்த ரெயில்கள் போத்தனூா் – கோவை இடையே இயக்கப்படாது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.