வீடு புகுந்து திருட முயன்ற பெண்- கையும் களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைப்பு..!

கோவை ஒண்டி புதூர், பெருமாள் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜித். இவரது மனைவி ஜெயலட்சுமி ( வயது 28 இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இவர் வீட்டை பூட்டி விட்டு கணவருடன் வெளியே சென்று விட்டார். அப்போது பக்கத்து வீட்டுக்காரர் பால்ராஜ் அவருக்கு போன் செய்து உங்கள் வீட்டில் அருகே ஒரு பெண்சந்தேகப்படும் நின்று கொண்டிருப்பதாக கூறினார்.இதையடுத்து ஜெயலட்சுமி வீட்டிற்கு சென்றார்.அப்போதுஅந்தப் பெண் வீட்டின் வெளியே வைத்திருந்த சாவியை எடுத்து கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைந்தார். பீரோவில் இருந்த பொருட்களை திருட முயன்ற போது அந்த பெண்ணை கையும் களவமாக பிடித்தனர். அவர் சிங்காநல்லூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு பக்கம் உள்ள சங்கரனார் குடிகாடு பகுதியை சேர்ந்த சிங்கமுத்து மனைவி தேவி ( வயது 43 ) என்பது தெரியவந்தது. இவர் மீது தாம்பரம், விழுப்புரம் காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன.