கோவையில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தவர் கைது..!

கோவை பேரூர் அருகே உள்ள தென்கரை பேரூராட்சி கரடிமடை கிராமத்தில் வனவிலங்குகளை வேட்டையாட பயன்படுத்தும் நாட்டு வெடிகுண்டு (அவுட்டுக்காய்) மற்றும் வெடி மருந்துகள் பதுக்கி வைத்திருப்பதாக பேரூர் போலீசுக்கு ரகசிய தகவல் வந்தது. இதன் பேரில் போலீசார் அந்த பகுதியில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது கரடி மடையில் உள்ள ரங்கன் (வயது 34) என்பவர் வீட்டில் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இவைகள் பறிமுதல் செய்யப்பட்டன.இதையடுத்து ரங்கன் தலைமறைவாகி விட்டார் .அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று அந்த பகுதியில் ஒரு இடத்தில் பதுங்கி இருந்த ரங்கனை போலீசார் கைது செய்தனர். இவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்..