பட்ட பகலில் மூதாட்டியிடம் 8 பவுன் செயின் பறிப்பு.பைக் ஆசாமிகள் கைவரிசை…

கோவை துடியலூர் பக்கம் உள்ளகுருடம்பாளையம், ராகுல் காந்தி நகரை சேர்ந்தவர் துரைராஜ்.இவரது மனைவி ஜானகி ( வயது 63) நேற்று மதியம் அவரது வீட்டின் முன் நின்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 ஆசாமிகள் இவரது கழுத்தில் கிடந்த 8 பவுன் எடை கொண்ட தாலி செயின் மற்றொரு செயின் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பி சென்று விட்டனர்.இது குறித்து துடியலூர் போலீசில் ஜானகி புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்துபைக்கில் தப்பிய 2 ஆசாமிளை தேடி வருகிறார்கள்.