கோவை கல்லூரி மாணவிகள் 2 பேர்திடீர் மாயம்…

கோவை சரவணம்பட்டி சிவானந்தபுரத்தை சேர்ந்தவர் கணேசன் இவரது மகள் ஸ்ரீ ஜனனி ( வயது 19) சரவணம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி ஐ. டி. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து அவர் தாயார் ரேகா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள். இதேபோல துடியலூர் கே. எம் ஜி புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரகு பிரசாத் .இவரது மகள் லட்சுமி (வயது 20 )இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.11ஆம் தேதி கல்லூரியில் பேராசிரியை ஒருவரை பார்க்க போவதாக வீட்டில் கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது தாயார் அஜிதா சரவணம்பட்டி போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.