பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் : ரிக்டரில் 7.1 ஆக பதிவு..!!

பிலிப்பைன்ஸில் 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம், மணிலாவில் நிலநடுக்கம் வலுவாக உணரப்பட்டது.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா உள்ளிட்ட பல பகுதிகளில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்ட நிலையில், லூசான் தீவில் புதன்கிழமை 7.1 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை என்றாலும் நிலநடுக்கத்தின் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

வடக்கு பிலிப்பைன்ஸில் புதன்கிழமை காலை 7.3 ரிக்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது . இந்த நிலநடுக்கம் தலைநகர் மணிலா முழுவதும் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பெரிய சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல் எதுவும் இல்லை.

நிலநடுக்கம் 10 கிமீ (6 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கூறியது: நிலநடுக்கத்தின் மையம் காலை 8:43 மணிக்கு லூசோன் பிரதான தீவில் உள்ள ஆப்ரா மலைப் பிரதேசத்தில் உள்ள டோலோரஸுக்கு கிழக்கு-தென்கிழக்கே 11 கி.மீ. (0043 GMT) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

Ilocos Surஇல் உள்ள வரலாற்றுச் சின்னமான பாண்டே பெல் கோபுரம், இன்று காலை தாக்கிய 7.3 நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கத்தின் அதிர்வை உணர்ந்து பீதியடைந்த மக்கள் தங்கள் கட்டிடங்களுக்கு வெளியே ஓடினார்கள். நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட அதிர்வால் மற்றும் கட்டடங்களின் ஜன்னல்கள் உடைந்தன என்று போலீஸ் மேஜர் எட்வின் செர்ஜியோ AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

நிலநடுக்கம் மிகவும் வலுவாக இருந்தது,” என்று கூறிய செர்ஜியோ, காவல் நிலைய கட்டிடத்தில் சிறிய விரிசல்கள் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

ஜப்பானில் இருந்து தென்கிழக்கு ஆசியா மற்றும் பசிபிக் படுகை முழுவதும் பரவியிருக்கும் தீவிர நில அதிர்வு நடவடிக்கையின் ஒரு வளைவான பசிபிக் “ரிங் ஆஃப் ஃபயர்” மீது அமைந்திருக்கும் பிலிப்பைன்ஸ் தொடர்ந்து நிலநடுக்கங்களால் அதிர்கிறது.