கணவரின் கள்ளக்காதலியை கடித்து குதறிய மனைவி-கோவையில் விசித்திர சம்பவம்..!!

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள கோவிந்த நாயக்கன்பாளையம், பெரியார் நகரை சேர்ந்தவர் ரமேஷ் .இவரது மனைவி கல்பனா ( வயது 37அதே பகுதியில் வசிப்பவர் அண்ணாமலை.இவர் கல்பனாவுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தாராம்.இதை அவரது மனைவி சங்கீதா பல தடவை கண்டித்தார்.இருவரும்  கேட்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அண்ணாமலையின் மனைவி சங்கீதா, அங்குள்ள கல்பனா வீட்டுக்கு சென்றார். அவருடன் தகராறு செய்து கைகளால் தாக்கினார். பின்னர் அவரது கையை கடித்து குதறினார். இதில் இவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் சங்கீதா அங்கிருந்து சென்று விட்டார். பலத்த காயமடைந்த கல்பனா அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.இது குறித்து கல்பனா பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் அண்னாமலை மனைவி சங்கீதா மீது 3 பிரிவின் கீழ் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.